தைப்பூசம்
தமிழ் கடவுள் முருகன்
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் தைப்பூசம் மிக முக்கியமான விழாவாகும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் கோலகலமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்தும் அலகு குத்தியும் தைப்பூச திருவிழாவை கொண்டாடுகின்றனர்.
முருகனின் ஆறுபடை வீடுகள்
திருப்பரங்குன்றம்(திருப்பரங்குன்றம்)
திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்)
திருவாவினன்குடி(பழனி)
திருவேரகம்(தஞ்சாவூர்)
குன்றுதோறாடல் (திருத்தணி)
பழமுதிர்சோலை (மதுரை)
என முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
தைப்பூசத்தின் வரலாறு
சிவன், சூரியனின் அம்சம். அம்பிகை, சந்திரனின் அம்சம் ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது ஆற்றல் உச்சம் பெறும். அதுவே தைப்பூசமாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் தினத்தன்று தான் அசுரர்களை அழிக்க முருகப்பெருமானுக்கு அம்பிகை வேல் வழங்கினார். எனவே தான் முருகனின் அருளைப்பெற விரும்புபவர்கள் தைப்பூச தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள்.
சிறப்புகள்
தைப்பூச விரத முறை
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்ககப்படும். மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம்.
காவடிகளில் பல வகை உண்டு.
தமிழகம் மட்டும் இல்லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் உலகம் முழுவதும் உள்ள தமிழ்கடவுள் முருகன் ஆலயங்களில் தைப்பூசம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.